Saturday, July 30, 2011

வெறுப்பின் நுனியில்

வெறுப்பின் நுனியில்
இரு இதயங்கள் நிற்க

வாழ்ந்திருந்த நொடியும்
பிரிந்திருக்கும் வலியும்
வாளென பாய்ந்து 
குருதியை  குடையும் 

காத்திருந்த நேரம்
கண்டிருந்த சுகமும் 
மறுவார்த்தை இன்றி 
விடைகொடுத்த தருணம் 

அலை ஓய்ந்த கரையில் 
புயல் ஓய்ந்த நிலையின்
வெறிச்சோடி விளங்கும்  
சோகத்தை நிகர்க்கும் 

வற்றிய குளத்தில்
தவிக்கின்ற மீனின்
துடிப்பினை போல
விழிகளும் வெறிக்கும் 

வாழ்கின்ற நிலையில்
எரிகின்ற மெழுகின்
நிலையென இரண்டு
உயிர்களின் அருகில்
வெறுப்பது நிற்கும்

நோய் கொண்ட ஜீவன்
வலியினை குறைக்கும்  
கருணை கொலையை
நாடிடும் இதயம் !!!