வெறுப்பின் நுனியில்
இரு இதயங்கள் நிற்க
வாழ்ந்திருந்த நொடியும்
பிரிந்திருக்கும் வலியும்
வாளென பாய்ந்து
குருதியை குடையும்
காத்திருந்த நேரம்
கண்டிருந்த சுகமும்
மறுவார்த்தை இன்றி
விடைகொடுத்த தருணம்
அலை ஓய்ந்த கரையில்
புயல் ஓய்ந்த நிலையின்
வெறிச்சோடி விளங்கும்
சோகத்தை நிகர்க்கும்
வற்றிய குளத்தில்
தவிக்கின்ற மீனின்
துடிப்பினை போல
விழிகளும் வெறிக்கும்
வாழ்கின்ற நிலையில்
எரிகின்ற மெழுகின்
நிலையென இரண்டு
உயிர்களின் அருகில்
வெறுப்பது நிற்கும்
நோய் கொண்ட ஜீவன்
வலியினை குறைக்கும்
கருணை கொலையை
நாடிடும் இதயம் !!!