Saturday, July 24, 2010

பௌர்ணமியின்  நிலவொன்று - என் 
இரவினிலே  வந்ததன்று  !
கை  கொண்ட கருமேகம்  - அதன் 
முகம் தடவி  கதை பேசும் 
முழு நிலவின் முகம் பார்த்து 
மோகனங்கள்  பாடி வரும் 
பால் நிலவு தனை மறந்து 
தோள்களிலே  சாய்ந்து விழ 
 இரவெல்லாம்  இன்பமென 
காற்றெல்லாம் காதல்சொல்ல- என     
எனைக்கொல்லும்   வெண்ணிலவும் 
உன்விழி தோன்றா  விடை என்ன  ?

காணாமல்  கரைந்திருந்தேன்-உயிர்
போகாமல்  வாழ்ந்திருந்தேன்
பதில்  என்ன  வெண்ணிலாவே  - என்
வேதனைகள்  உணர்த்திடாயோ
விழியெல்லாம்    நீர்குளமாய்
மனமெல்லாம்   புயல்மழையாய் 
மலர்மாலை தொடுத்து வைத்தேன்
மன்னவனை  தேடிவந்தேன் 
மெய்சொல்வாய் வெண்ணிலாவே 
தலைவனை நீ கண்டதுண்டோ  !

நீ மட்டும்  நிதம்  நிதமும் 
காதலிலே  உலவி வர 
காற்றெல்லாம் காதல்சொல்ல
எனைக்கொல்லும் வெண்ணிலவே 
என் சோகம் உணர்ந்திடாயோ !!!