பௌர்ணமியின் நிலவொன்று - என்
இரவினிலே வந்ததன்று !
கை கொண்ட கருமேகம் - அதன்
முகம் தடவி கதை பேசும்
முழு நிலவின் முகம் பார்த்து
மோகனங்கள் பாடி வரும்
பால் நிலவு தனை மறந்து
தோள்களிலே சாய்ந்து விழ
இரவெல்லாம் இன்பமென
காற்றெல்லாம் காதல்சொல்ல- என
எனைக்கொல்லும் வெண்ணிலவும்
உன்விழி தோன்றா விடை என்ன ?
காணாமல் கரைந்திருந்தேன்-உயிர்
போகாமல் வாழ்ந்திருந்தேன்
பதில் என்ன வெண்ணிலாவே - என்
வேதனைகள் உணர்த்திடாயோ
விழியெல்லாம் நீர்குளமாய்
மனமெல்லாம் புயல்மழையாய்
மலர்மாலை தொடுத்து வைத்தேன்
மன்னவனை தேடிவந்தேன்
மெய்சொல்வாய் வெண்ணிலாவே
தலைவனை நீ கண்டதுண்டோ !
நீ மட்டும் நிதம் நிதமும்
காதலிலே உலவி வர
காற்றெல்லாம் காதல்சொல்ல
எனைக்கொல்லும் வெண்ணிலவே
என் சோகம் உணர்ந்திடாயோ !!!