Monday, May 3, 2010

காதல்

தனிமைகள்  அடர்ந்த 
தாமரைக் குளத்தில் 
தனியாய்  பிறந்து 
இதழ்கள் மலர்ந்த 
மலராய் வளர்ந்து 
மனதில் நிறைந்து
கண்கள்  மயக்கும் 
மாயமாய்  காதல்

மழையின்  பரப்பில் 
நிழலை  சூட்டி-விரல் 
தடவி  செல்லும் -வெண் 
முகிலின்  சுவடாய்
உயிரை  வருடி 
இதயம்  நெருடி 
உலவும்  நினைவில் 
உலகம்  மறக்கும் 

இயல்பாய்  புரிந்து 
நேர்த்தியாய் குழப்பும் 
சிலந்தியின்  வலையில் 
சிக்கிய தவிப்பில் 
தேனின் சுவையை
சுவைத்திட  வைக்கும் 
விழிகளின்  நுனியில் 
வானவில்  தோன்றும் 

இன்பத்தின்   துன்பமாய் 
துன்பத்தின்  இன்பமாய் 
முட்களின்  தோன்றிய 
மலரென  வளர்ந்து
மனதினில்   நிறைந்து
கண்களை  மயக்கும்
மாயமே   காதல் !!!