Thursday, March 18, 2010

அலைமோதி சரிகின்ற கரையில்

அலைமோதி சரிகின்ற  கரையில்  
அசையாமல்  அருகில் இருந்தோம்
மனதோடு  மயங்கிய  நிலையில்
விழியோடு  உறவுகள்  கொண்டோம்  
விளங்காமல்  வியந்திடும்  கடல்நீர்
தன்  ஈரத்தை  இதயத்தில்  சேர்க்கும்  

இமைக்காமல்  பார்த்திட்ட  விழிகள் 
சளைக்காமல்  பேசிய   உதடும்
வளையோசை  சிணுங்கல்கள் - யாவும் 
காதோரம்  உன் ரகசியம்  பேசும் 
மனதோரம்  மெல்ல நகர்ந்து 
எண்ணத்தின்  வண்ணங்கள்  சொல்லும் 

உலகெல்லாம்  நிசப்தமாய்  ஆகி  -உன் 
குரல் மட்டும்  ஒலித்திட  கேட்கும்   
அசைகின்ற  பொருள்கள்  அனைத்தும் 
அசையாமல்  என்னையே நோக்கும் 
போகின்ற  பாதைகள்  எல்லாம் 
மலர்பூத்து  மணம்வீசி   போகும் 

அறைக்குள்ளே  அடைபட்ட கிளிகள் 
தன்  எண்ணம்போல்  வானத்தில்  திரியும்
நிலை என்றே  நெஞ்சம்  நெகிழ்ந்து  
மனதோடு  மயங்கிய  நிலையில் 
அலைமோதி சரிகின்ற கரையில்
அசையாமல் அருகில் இருந்தோம் !!!