வழிகளும் திரும்பி - உனை
நோக்கிடும் இதயம்-மதி
மயங்கிய நிலையில் -செயல்
இழந்திட்ட பின்பும்
மனதினில் சுமையாய்- இந்த
காதலும் ஏனோ-உனை
நீங்கிய நேரம் - உயிர்
பிரிந்திடும் போதும்
வியத்தகு நிலையாய்
வாழ்கிறேன் நானும்
சுமையென தாங்கும்
பிரிவதன் தாக்கம்
உலகத்தின் கதவில்
இருள் நின்ற நேரம்
பறவைகள் கூட்டம்
பறந்திடும் தோற்றம்
திருவிழா கூட்டம்
வடிந்திட்ட போதும்
வெறிச்சோடி போகும்
கடைவீதி வானம்
விடியலின் கரையில்
சூரியன் வரவில்
தாமரை மலரை
தங்கிடும் குளமாய்
கண்களில் மழை நீர்
தேங்கிடல் ஏனோ
தலைவனை காண
ஏங்கிடல் ஏனோ
தலையணை நனைந்து
நீண்டிடும் இரவில்
சுடுநீரில் இட்ட
மீன் போலே நானும்
பாதங்கள் வெறுத்த
சலங்கைகள் எனவே
ஜாதிகளின் அலையில்
கரைந்திடல் தானோ!!!
நோக்கிடும் இதயம்-மதி
மயங்கிய நிலையில் -செயல்
இழந்திட்ட பின்பும்
மனதினில் சுமையாய்- இந்த
காதலும் ஏனோ-உனை
நீங்கிய நேரம் - உயிர்
பிரிந்திடும் போதும்
வியத்தகு நிலையாய்
வாழ்கிறேன் நானும்
சுமையென தாங்கும்
பிரிவதன் தாக்கம்
உலகத்தின் கதவில்
இருள் நின்ற நேரம்
பறவைகள் கூட்டம்
பறந்திடும் தோற்றம்
திருவிழா கூட்டம்
வடிந்திட்ட போதும்
வெறிச்சோடி போகும்
கடைவீதி வானம்
விடியலின் கரையில்
சூரியன் வரவில்
தாமரை மலரை
தங்கிடும் குளமாய்
கண்களில் மழை நீர்
தேங்கிடல் ஏனோ
தலைவனை காண
ஏங்கிடல் ஏனோ
தலையணை நனைந்து
நீண்டிடும் இரவில்
சுடுநீரில் இட்ட
மீன் போலே நானும்
பாதங்கள் வெறுத்த
சலங்கைகள் எனவே
ஜாதிகளின் அலையில்
கரைந்திடல் தானோ!!!