விழி இழந்த மனம் ஒன்று
குரல் செவியே புலம் என்று
விளையாட மனம் கொண்டு
குரல் கொண்ட உன்னுடனே
நடை போட்டு வரும் வேளை
நிகழ்கால நிஜங்கள் எல்லாம்-உன்
குரலாகி நிழல் காட்ட
நிறமரியா என் மனமும்
குரலதிர்வில் நிறம் சேர்த்து
இன்பமென துன்பமென
கோபமென தாபமென -புது
வர்ணங்கள் உணர்ந்து வரும்
விளையாடும் வேளையிலே - கால்
இடறி விழும் தருணத்திலே - நீ
குரலெழுப்பி கூப்பிடாமல்
வலியென்றே உணர்த்திடாமல்
விழியில்லா செவி மட்டும்
புலமென்றே கொண்ட மனம்
புரியாமல் உன்னிடத்தில்
வழக்கமென விளையாடும் - தன்
வலியெல்லாம் மறந்து வந்து
சிரிப்புடமே தோள்சாயும் - பின்
வலியென்று வேதனையாய்- எனை
வெருப்பென்றே நீ நோக்க
விளங்காமல் பேதை மனம்
வழக்கமென விளையாடும்
பதிலொன்றும் கூறாமல்
பழகியதே பாவமென்று
எனை விடுத்து நீ போக
கால் தடத்தின் ஓசைதனை - உன்
விளையாட்டின் முறை எனவே
ஓசை நின்ற நேரம் பார்த்து
விழி இல்லா பேதை மனம் -தன்
விளையாட்டை துவங்கிவிடும்
நீ இல்ல நிலையதனை
துளி கூட உணராமல்
விழி இல்லா பேதை மனம்
வழக்கமென விளையாடும் - தன்
வலியெல்லாம் மறந்து வந்து
சிரிப்புடமே தோல் தேடும் !!!