Tuesday, July 21, 2009

ராதையின் கண்ணன்

குழலோசை கேட்டு மதி மயங்கும் வேளை

மலர் வாசம் சேர்ந்து மனம் சரியும் சோலை -கண்ணன்

முகம் தேடி விழியும் வழியதனை நோக்கி

பின்னே காணாத உருவம் கண் முன்னே தோன்றி

மண் மீது சாய்ந்தாள் அவன் மடியென்றே நினைத்து

மனம் மட்டும் எங்கோ நினைவலையில் மிதக்கும் .

குழலதுவா இனிமை ?

குழலான மூங்கிலில் ,

இன்னும் இசையாகும்

காற்றில் கொஞ்சம்

ஈரத்தின் சுவைதான் -அவன்

இதழதுவோ இனிமை -அதில்

இணைவதுவே இனிமை .

ராதை எண்ணத்தில் நிலைத்தான்,

இவள் இன்பத்தில் திளைத்தாள்

இணைவதாய் இணைந்து

கொஞ்சம் பிரிவதாய் பிரிந்து

இவன் செய்யும் லீலை

இவளுள் துன்பத்தின் ஜுவாலை

நித்திரையில் இறைவன்

தோற்றத்தை கண்டு

நகைக்கின்ற கிள்ளை -இவள்

விழித்ததும் காணா உருவத்தை

எண்ணி அழுதிடும் பிள்ளை .

எக்கணமும் நீங்கும்

உயிர் தாங்கி நின்றாள்

அவன் வரவை நோக்கி !

சிக்கனம் ஏனோ

கோகுலத்து கண்ணா

கட்சி தாராயோ !