போ என்றே விரட்டினாய்
நாயென்றே வாசலில் நான்
நாயிது போவென்று உரைத்தால் - உன்
நெஞ்சம் தாங்காதென்று
குறைக்கத்தான் சொல்லிக் கொடுத்தான்- இறைவன் என்றும்
மெய்யன்பாய் இருக்கத்தான் பழக்கி வளர்த்தான் !
மண்ணில் மனிதங்கள் செத்த பிறகும்
காயவில்லை இங்கு மண்ணின் ஈரம்
மாறவில்லை செல்ல நாயின் பாசம்
சுற்றி ஓய்ந்த பிறகும்
எட்டி உந்தன் முகத்தை
வெறித்து நின்று பார்க்கும்-
செல்ல நாயென்றே வந்து சேர்ந்தேன்
நன்றி மட்டும் அன்றி
பாசம் கொஞ்சம் கலந்து
வெள்ளை மனம் கொண்ட-
செல்ல நாயென்றே வந்து சேர்ந்தேன்
போ என்றே உரைத்தாய் - ஓர்நாள்
போகின்றேன் என்றால் - நீயும்
தனிமையில் நோகத்தான் நேரும் - என
போகாமல் நிற்கிறேன் போ - அட
நாயென்றே நானும் உன்னால்
போ என்றே கற்றேன் போ
நானுரைத்த முதல் மொழியும்
வெறும் 'போ' என்றே போய் முடிய
போய்க்கொண்டே இருக்கிறேன் - நெஞ்சம்
செல்ல நாயென்றே வந்து சேரும் !