சிறு குடைதனில் இரு உயிர்கள்தான்
சற்று நனைந்தாய் நனையாமல்
உயிர் தேடிடும் உனதாசைகள்
கொஞ்சம் நடந்ததாய் நடவாமல்
எனை தேடியே விரல் தீண்டையில்
மிச்சம் உணர்ந்ததாய் உணராமல்
தினம் பேசிய சில வார்த்தைகள்
இன்னும் புரிந்ததாய் புரியாமல்
கரம் சேர்கையில் உன்னை சேர்ந்ததாய்
மனம் துடிப்பதாய் துடிக்காமல்
பனி தீண்டையில் இவள் சூரியன்
மெல்ல உறைந்ததாய் உறையாமல்
உனை பார்த்தால் விழி கொண்டது
நிதம் போதுமாய் போதாமல்
உடன் நின்றது உடன் சென்றது
என வாழ்வதாய் வாழாமல் !