நீயில்லா நாளில்
நிலவில்லா வெளியில்
வெறித்திருந்த வானம்
தனித்திருந்த நானும்
மீனில்லா விண்ணில்
ஒளியில்லா இரவில்
இதழினை இழந்த
மலரொன்று தனியே
செடிதனில் நிற்கும்
நிலையென்று ஆனேன்
காட்சியின் பிழையாய்
நீ கண்களில் தோன்ற
நிறமில்லா உலகில்
நிலையின்றி வாழும்
நிஜமில்லா பொருளின்
நிழலென்று ஆனேன்
மழை தொடர்ந்த வெயிலில்
மனம்போல முளைத்து
வெண்மையாய் சிரிக்கும்
மென்மையாய் வளர்ந்த
மழைகாளான் அதுவும்
நீ புன்னகைத்து பேசும்
பொருளில்லா மொழிக்கும்
புலவர்கள் எழுதா
புது அர்த்தங்கள் உணர்த்தும்
தங்கத்தில் இழைத்த
தவறின்றி செய்த
பதுமைக்கே ஒப்பும்
பொக்கிஷ பெண்ணே-என்
விடிவெள்ளி நீயே !